search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணினி மென்பொருள் பயிற்சி பயிலரங்கு
    X

    கணினி மென்பொருள் பயிற்சி பயிலரங்கு

    • காளீஸ்வரி கல்லூரியில் கணினி மென்பொருள் பயிற்சி பயிலரங்கு நடந்தது.
    • ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின், இளங்கலை வணிகவியல் துறை சார்பில் மைக்ரோசாப்ட் எக்செல் பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி பயிலரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    துறைத் தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதுகலை வணிகவியல் ஆராய்ச்சித் துறை பேராசிரியர் யோகேஷ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு எக்செல் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.

    2-ம் ஆண்டு மாணவி திவ்யா வரவேற்றார். மாணவி ஐஸ்வர்ய லட்சுமி அறிமுகப்படுத்தி பேசினார். முடிவில் மாணவன் ஜெய் பிரகாஷ் குமார் நன்றி கூறினார். மாணவிகள் மு.ஜெயராசாத்தி மற்றும் வை.ஜமுனாதேவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    Next Story
    ×