search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர பட்டய பயிற்சி ஆரம்பம்
    X

    கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர பட்டய பயிற்சி ஆரம்பம்

    • கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழு நேர பட்டய பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
    • அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    விருதுநகர்

    மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செயல்படும் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழி www.tncuicm.com மூலம் 13.9.2023 முதல் 22.9.2023 வரை பெறப்படுகிறது.

    விண்ணப்பிக்க வேண் டிய கடைசி நாள் 22.9.2023 பிற்பகல் 5 மணி வரை ஆகும். மாணவர் சேர்க்கைக் கான குறைந்த பட்ச கல்வித் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.8.2023 அன்று குறைந்த பட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண் டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி (முழு நேரம்), பயிற்சி காலம் ஓராண்டு (இரண்டு பருவ முறைகள்) மற்றும் கட்டணம் ரூ.18,850 ஆகும். இதர தகவல்களை அறிந்து கொள்ள www.tncuicm.com அல்லது கூடுதல் விபரங்களுக்கு மேலாண்மை நிலைய முதல் வர் (பொறுப்பு) அலை பேசி எண்: 88071 59088 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×