என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சி யில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளிமுதல் திருவனந்தபுரம் ஊரணி வரை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலையினையும், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பொது மயானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.148.80 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் நகராட்சி குட்பட்ட காமராஜர் நகர், நகராட்சி குடிநீர் தொட்டி அருகில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது சமை யலறை கட்டிடங்களையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, இராஜபாளையம் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், வட்டாட்சியர் ராமசந்திரன், இளநிலை பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்