search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    புதிதாக கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    • பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி யில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளிமுதல் திருவனந்தபுரம் ஊரணி வரை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலையினையும், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பொது மயானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.148.80 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் நகராட்சி குட்பட்ட காமராஜர் நகர், நகராட்சி குடிநீர் தொட்டி அருகில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது சமை யலறை கட்டிடங்களையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, இராஜபாளையம் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், வட்டாட்சியர் ராமசந்திரன், இளநிலை பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×