search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்க்கை தொடக்கம்
    X

    கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்க்கை தொடக்கம்

    • முழு நேரம்- அஞ்சல் வழி கூட்டுறவு பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார்விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022 - 23 ஆண்டிற்கு முழு நேரக் கல்வி மூலம் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இதில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலா–ண்மை, நகை மதிப்பீடு ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்குரிய மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் குறைந்த பட்ச கல்வி தகுதியான பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 28-ந் தேதி வரை ரூ.100 செலுத்தி நேரில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணி–புரியும் இந்த பட்டயப் பயிற்சி பெறாத நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் தற்போது அஞ்சல் வழி கல்வி மூலம் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி.டிப்போ எதிரில், சாத்தூர் என்ற முகவரியில் தபால் மூலமாக வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு, 88071 59088 என்ற முதல்வரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×