என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுமியை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தில் மோதல்
- சிறுமியை செல்போனில் படம் பிடித்த சம்பவத்தில் மோதல்; 7 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவரது மனைவி மணி மேகலை(வயது29). சம்பவத்தன்று இவர்களது மகள் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றிருக்கிறார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த அனுஷியா (28) மற்றும் மல்லிகா (62) ஆகிய இருவரும் சிறுமியை செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். தனது மகளை செல்போனில் படம் எடுத்தது குறித்து அனுஷியா வீட்டிற்கு சென்று மணி மேகலை கேட்டார்.
அப்போது இரு தரப்பின ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் சாத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் மல்லிகா மற்றும் அனுசியா மீதும், மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் காசி அம்மாள், பழனி, நந்தினி, மணிமேகலை, தீபாஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்