அருப்புக்கோட்டையில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி

அருப்புக்கோட்டையில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது.வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்குகிறது.
அருப்புக்கோட்டையில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி
Published on

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவில் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா தொடங்குகிறது. ஏப்ரல் 4-ந் தேதி பூக்குழி திருவிழா நடக்கிறது. இந்த நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு முத்துமாரியம்மன் கோவிலில் தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடந்தது. பங்குனி மாத கடைசி வெள்ளியன்று நகரின் முக்கிய பகுதியில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளோட்ட நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை தலைவர் காமராஜன், கோவில் டிரஸ்டி ராஜரத்தினம், உதவிச் செயலாளர் முத்துசாமி, சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், முன்னாள் உறவின்முறை தலைவர் மனோகரன், எஸ்.பி.கே. ஆண்கள் பள்ளி செயலாளர் மணி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com