search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டாள் கோவிலை சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு
    X

    ஆண்டாள் கோவிலை சுற்றுலா பயணிகள் பார்வையிட ஏற்பாடு

    • வழிகாட்டி உதவியுடன் ஆண்டாள் கோவிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் ஏற்பாட்டை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலா வழிகாட்டி உதவியுடன் கூடிய சுற்றுலாவை கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்த சுற்றுலா வில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டாள் கோவில் ஸ்தல வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டி யின் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கங்கள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி என்ற நடைமுறையில் இது செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாவிற்கான கட்டண தொகையாக ஒரு சுற்றுலா பயணிக்கு ரூ.100 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு மாவட் டங்கள் மற்றும் மாநிலங்க ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயனடைவார் கள்.தொடக்க விழா நிகழ்ச்சி யில் சுற்றுலா அலுவலர் அன்பரசு மற்றும் செயல் அலுவலர் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×