விவசாய தொழிலாளி மர்ம சாவு

வத்திராயிருப்பு அருகே விவசாய தொழிலாளி மோட்டார் அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். மகளுக்கு திருமண நிச்சயம் செய்திருந்தார்.
விவசாய தொழிலாளி மர்ம சாவு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை அடுத்துள்ள ஆத்தங்கரை பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 47). இவருக்கு கிருஷ்ணம்மாள் (39) என்ற மனைவியும், மகன் மகள்களும் உள்ளனர்.

ராஜா மற்றும் அவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து விவசாயம் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜா தனது மகளுக்கு திருமண நிச்சயம் செய்தி ருந்தார். இதற்காக உறவினர் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழை கொடுத்து வந்தனர்.

சம்பவத்தன்று கிருஷ் ணம்மாள் மட்டும் திரும ணத்திற்கு அழைப்பிதழை கொடுக்க வெளியூர் சென்று விட்டார். 2 நாட்களுக்கு பின்பு ஊர் திரும்பிய கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணம்மாள் உடனே கூமாபட்டி போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜா எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் தந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com