இளம்பெண்-வாலிபர் மாயம்

இளம்பெண்-வாலிபர் மாயமானார்கள்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்-வாலிபர் மாயம்
Published on

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி கிருத்விக்(4) என்ற மகன் உள்ளார். கோபாலகிருஷ்ணன் திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சொந்த ஊரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மனைவி, குழந்தையை அனுப்பி வைத்தார். விசேஷம் முடிந்த பின்பு அவர்களை கோபால கிருஷ்ணனின் உறவினர் திருச்சிக்கு பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் முத்துலட்சுமி திருச்சி செல்லவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் குமாரலிங்க புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (28), மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் பலனில்லை. இதை தொடர்ந்து மகனை கண்டுபிடித்து தருமாறு ஆமத்தூர் போலீசில் அவரது தாய் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com