search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலித்தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் பனை மரத்தில் மோதி விபத்து
    X

    நரிக்குடி அருகே இன்று அதிகாலை பனைமரத்தில் மோதி விபத்தில் சிக்கிய தொழிலா ளர்களை ஏற்றி வந்த வேனை படத்தில் காணலாம்.

    கூலித்தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் பனை மரத்தில் மோதி விபத்து

    • கூலித்தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள உலக் குடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மதுரை சிலைமான் பகுதி யில் இயங்கி வரும் தனியா ருக்கு சொந்தமான பந்து தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் கள். தினமும் கம்பெ னிக்கு சொந்தமான வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் உலக்குடி யில் இருந்து நேற்று காலை வேலைக்கு சென்ற உமா, முத்துமாரி, அனிதா, மல் லிகா, தமிழரசி, செல்வி, முருகேஸ்வரி மற்றும் பாண் டீஸ்வரி உள்பட 12 பேரும் வழக்கம் போல இரவு வேலைக்கு சென்று விட்டு வேனில் இன்று அதிகாலை யில் வீடு திரும்பி கொண்டி ருந்தனர்.

    அந்த வேனை சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி பகுதியை சேர்ந்த முத்துப் பாண்டி (23) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 2.45 மணியளவில் சாலை இலுப்பைகுளம் அருகே யுள்ள மாணிக்கனேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டிரைவர் முத்துப் பாண்டி மற்றும் தொழிலா–ளர்கள் உள்பட வேனில் பய ணம் செய்த 13 பேரும் படுகாயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் உலக்குடி பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (28) என்பவருக்கு கால் முறிந்தது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவம் இடத் திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீய ணைப்புத்துறையினர் படு காயமடைந்த அனைவரை யும் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×