search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ்காரர்-இளம்பெண்கள் உள்பட 6 பேர் மாயம்
    X

    போலீஸ்காரர்-இளம்பெண்கள் உள்பட 6 பேர் மாயம்

    • போலீஸ்காரர்-இளம்பெண்கள் உள்பட 6 பேர் மாயமானார்கள்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ஆயுதப்படை யில் காவலராக பணி புரிபவர் விவேக் (வயது 30). இவரது மனைவி கற்குவேலாயி (29). பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சூலக்கரை வ.உ.சி. நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    விவேக் தனது செல்போ னில் பல பெண்களுடன் பேசி வந்துள்ளார். இதனை கற்குவேலாயி கண்டித்துள்ளார். ஆனால் விவேக் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆயுதப்படை அலுவலகத்திற்கு நேரில் சென்று கற்குவேலாயி புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விவேக் திடீரென மாயமானார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அய்யனார் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் பாண்டிச்செல்வி (23). கவரிங் நகை கடையில் வேலை பார்த்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி(45). இவரது மகள் அஸ்வினி (18). பிளஸ்-2 படித்து விட்டு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தண்ணீர் எடுத்து வருவதாக கூறிச்சென்றவர் மாயமானார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (23). இவருக்கு சக்தி அய்யனார் என்பவருடன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று குழந்தை களுடன் வெளியே சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் வீரசெல்வி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசியை சேர்ந்தவர் யாகப்பன்(49). இவரது 17 வயது மகள் சிவகாசி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஏற்கனவே மாய மாகி அதன்பிறகு கள்ளக்குறிச்சி யில் இருந்து போலீசார் மீட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் லட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமன்னார். இவரது மகள் ரமாதேவி(22). விருதுநகரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ராஜமன்னார் வன்னியம்பட்டி போலீசில் அளித்துள்ள புகாரில், பொட்டல்பட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தனது மகளை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளதாகவும், இதுபற்றி விசாரித்து மகளை மீட்டுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை வலையபட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(38). இவரது 17 வயது மகள் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு பெருங்குடி போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.

    இதையடுத்து மகளை அருப்புக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் சூலக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி.

    இவரது மகன் சிவசந்தோஷ் (12). 6ம் வகுப்பு படிக்கிறான். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் மாயமாகி விட்டான். எங்கு சென்றான்? என தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×