search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களை மிரட்டிய 4 ரவுடிகள்
    X

    பொதுமக்களை மிரட்டிய 4 ரவுடிகள்

    • பொதுமக்களை மிரட்டிய 4 ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அம்பலப்புளி பஜார் முருகன் கோவில் தெரு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இங்கு சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ், கார்த்தி, சக்திவேல் உள்பட 4 பேர் பட்டாக்கத்தியை காட்டி அந்த வழியாக வந்த பொதுமக்களை மிரட்டி தகாத வார்த்தைகளில் பேசினர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் வந்த வாலிபரை கும்பல் மறித்தது. தொடர்ந்து அந்த பெண்ணை பொது இடத்தில் கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசினர். 4 பேரும் ஆயுதங்களை வைத்திருந்ததால் அப்பகுதி மக்கள் அவர்களை தட்டி கேட்க வில்லை.

    பொது இடத்தில் ஆயுதங்களை வைத்து பொதுமக்களை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 4 ரவுடிகளை தேடி வருகிறார்.

    ராஜபாளையம் அம்பலப்புலி பஜார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை கேலிக்கிண்டல் செய்வது, பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை அதிகரித்துள்ளன. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×