search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு
    X

    இளம்பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

    • இளம்பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள உழுத்திமலையை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகள் கற்பகமும், சிவகங்கை மேலபசலையை சேர்ந்த பூமிநாதனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கற்பகம் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள்.

    அங்கு மது குடித்த பூமிநாதன் தகராறு செய்து மனைவியை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க வந்த அவரது பெற்றோர் பாக்கியம்-காமாட்சிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. 3பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதனை கைது செய்தனர்.

    Next Story
    ×