158 கல்குவாரிகள் வேலை நிறுத்தம்; 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

158 கல்குவாரிகள் வேலை நிறுத்தம்; 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.
158 கல்குவாரிகள் வேலை நிறுத்தம்; 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 158 கல், கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்ற னர். இந்த நிலையில் குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் மாவட்ட கனிம வளத்துறை இயக்குநர் தங்கமுனியசாமி தாமதம் செய்வதாக கூறி கடந்த 4-ந் தேதி முதல் 158 கல்குவாரி கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தொடர் வேலை நிறுத் தத்தால் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மண், கற்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளதால் மாவட்டத்தில் கட்டுமான பணிகளும் பாதி யிலேயே நிறுத்தப் பட்டு உள்ளது. இதுகுறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் நாராயண பெருமாள் கூறுகையில், குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவது தொடர்பாக கடந்த 10 நாட்களாக பிரச்சினை உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளோம்.

மாவட்ட நிர்வாகம் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் லாரி உரிமை யாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகி யோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com