search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-வது ஆண்டாக 100 சதவீதம் வரி வசூல்
    X

    2-வது ஆண்டாக 100 சதவீதம் வரி வசூல்

    • 2-வது ஆண்டாக 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டு விட்டது.
    • நகராட்சி ஊழியர்களை தலைவர் தங்கம் ரவி கண்ணன் பாராட்டினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 31 ஆயிரம் வரி இனங்கள், 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 12 லட்சம் காலிமனை இனங்கள், 311 கடை வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளன. நகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலுவை வரிகள் அனைத்தும் சென்ற ஆண்டு வசூல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 31-ந் தேதிக்குள் நிலுவை வரியையும் சேர்த்து 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டுக்குரிய தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான விருது மற்றும் ரூ.15 லட்சம் ரொக்க பரிசை நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிகண்ணன், ஆணையாளர் ராஜ மாணிக்கம் ஆகியோர் பெற்றனர்.

    இந்த ஆண்டு சொத்து வரி ரூ.4 கோடி, குடிநீர் வரி ரூ.1.76 கோடி, வாடகை மற்றும் குத்தகை உள்ளிட்ட வரியற்ற வருவாய் ரூ.1.58 கோடி என அனைத்து வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் 100 சதவீதம் வசூல் செய்யப் பட்டுள்ளது. 2-வது ஆண்டாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 100 சதவீத வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ராஜ மாணிக்கம் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் வரி நிலுவை தொகை இருந்ததால் வரி வசூலில் சிரமம் ஏற்பட்டது. இந்த ஆண்டு நிலுவை வரி இல்லாததால் நடப்பு நிதியாண்டின் வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் 100 சதவீதம் வசூல் செய்யப்பட்டு விட்டது.

    இதன் மூலம் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீட்டை பெற முடியும். மேலும் நகராட்சியின் வரியற்ற வருவாயை பெருக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    100 சதவீத வரி வசூல் செய்த நகராட்சி ஊழியர்களை தலைவர் தங்கம் ரவி கண்ணன் பாராட்டினார்.

    Next Story
    ×