என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீரபாண்டியில் நாளை மின்தடை
- சி.ஜி.புதூர் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.
- தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வீரபாண்டி, சி.ஜி.புதூர் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், லட்சுமிநகர், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன் பாளையம்புதூர், முல்லை நகர், இடும்பன் நகர், காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.