search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
    X

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

    • பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர்.
    • அனைத்து ெரயில்களிலும் தீவிர மோப்ப நாய், மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க மத்திய மாநில போலீசார் கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு பணியிலும், தீவிர ரோந்து பணி மற்றும் சோதனையில் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையிலான 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ெரயில்வே போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருடன் இணைந்து ெரயில் நிலையத்திலும், அனைத்து கோவில்களில் ஆயுதம் ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதேபோல புதிய, பஸ் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரோந்து பணி செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலையில் மோப்ப நாயுடன் விரைந்து வந்த வெடிபொருட்களை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள், விழுப்புரம் ெரயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ெரயில்களிலும் தீவிர மோப்ப நாய், மெட்டல் டிடெக்கர் மூலம் சோதனை செய்தனர். ெரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளை மெட்டல் டிடெக்டர் மூலம் ேசாதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால் விழுப்புரம்ெரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×