search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் ரயில் நிலையத்தில் உலக புகழ்பெற்ற   ஸ்ரீ கவுரி பட்டு சேலை விற்பனை- கண்காட்சி
    X

    விழுப்புரத்தில் பட்டு சேலை விற்பனை மற்றும் கண்காட்சி தொடங்கியது. 

    விழுப்புரம் ரயில் நிலையத்தில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ கவுரி பட்டு சேலை விற்பனை- கண்காட்சி

    • விழுப்புரம் ரயில் நிலையத்தில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ கவுரி பட்டு சேலை விற்பனை- கண்காட்சி நடைபெற்றது.
    • விழுப்புரம் ெரயில்வே மேலாளர் மருதமுத்து, வணிக ஆய்வாளர்அன்பரசன் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் ெரயில் நிலையத்தில்உலகப் புகழ்பெற்ற பாரம்பரியமிக்க சிறுவந்தாடு ஸ்ரீகவுரி பட்டு சேலை சென்டர் கண்காட்சி அரங்கம் இந்திய ெரயில்வேயில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரபலமான, பாரம்பரியமான பொரு ள்கள் விற்பனை செய்யும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் கண்காட்சி மற்றும் விற்பனைஅரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக தென்னக ெரயில்வே திருச்சிராப்ப ள்ளி ஒன்ஸ்டேஷன் புரோட க்சன்டக்சன் அடிப்படையில் இத்திட்டம்தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்தில் உலகபுகழ்பெற்ற பாரம்பரியமிக்க சிறுவந்தாடு பட்டு சேலை விற்பனை மற்றும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொருட்களை ஊக்கப்படுத்தும் வகை யிலும், பயணிகளுக்கும் எளிதில் பிரபலமான பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுவந்தாடு பட்டு சேலை விற்பனை கண்காட்சியைசிறுவந்தாடு ஸ்ரீ கவுரி பட்டு சென்டர் உரிமையாளர் குத்துவிளக்கு ஏற்றி தனது பட்டு அரங்கத்தை தொடங்கி வைத்தார். விழுப்புரம் ெரயில்வே மேலாளர் மருதமுத்து, வணிக ஆய்வாளர்அன்பரசன் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    ஹோஸ்ட் லயன்ஸ்சங்க மாவட்ட தலைவர் ஏ.எஸ்.கோபி காமதேனு லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் சம்சுதீன் முதல் விற்பனையை துவக்கி வைக்க வேளாண்மை துறை ஆத்ம திட்ட வட்டார தொழில்நுட்ப அலுவலர் தேன்மொழி ராஜேந்திரன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

    விழுப்புரம் சிறுவந்தாடு ஸ்ரீ கவுரி பட்டு சென்டர் கோபி என்கின்ற வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- ‌‌ இந்த விற்பனை கண்காட்சி வரும் ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து சேலைகளுக்கும் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படும்.குறைந்தபட்சம் ரூ 2000 முதல் ரூபாய் 5 லட்சம் வரை பட்டுப் புடவைகள் கிடைக்கும் மேலும் திருமணத்திற்கு மணமக்களின் பெயர்களை யும் புடவையில் நெய்து தரப்படும். நவ நாகரீக காலத்திற்கு ஏற்பவும் மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் வண்ணம் சேலைகளில் வடிவமைப்பு தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×