

விழுப்புரம்:
அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்கம் பகுதியில் சாராய ஊறல் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அடுக்கம் மலையில் சுமார் 400 லிட்டர் சாராய ஊறல்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.இது தொடர்பாக அசோக் என்பவர் கைது செய்யப்பட்டார்.