search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சிகலெக்டர் பார்வையிட்டார்
    X

    தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா, மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி ஆகியோர் பார்வையிட்டனர்.

    விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சிகலெக்டர் பார்வையிட்டார்

    • தமிழ்நாடு நாள் விழா வருகின்ற ஜூலை 23 வரை நடைபெறுகிறது.
    • மாணவ-மாணவிகள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில், செய்தி மக்கள் தொடர் புத்துறை சார்பில், தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, அமைக்கப் பட்டிருந்த தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா, மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜுலை 18-ஆம் நாளை "தமிழ்நாடு நாள் விழா" குறித்து பொது மக்கள் மற்றும் மாண வர்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், "தமிழ்நாடு நாள் விழா" வருகின்ற ஜூலை 23 வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற வுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், "தமிழ்நாடு நாள் விழா" சிறப்பு புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு உருவான வரலாறு, தமிழ்நாட்டின் சிறப்புகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க செயல் திட்டங்கள், தமிழ்மொழியின் தனித் தன்மை போன்ற பல்வேறு அரிய புகைப் படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவி கள் அனைவரும் தமிழ்நாடு நாள் விழா குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை பார்வை யிட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் வருகை புரிந்து ஆர்வமுடன் பார்வையிட்டு, தமிழ்நாடு நாள் பற்றி தாங்கள் அறிந்து கொண்டதாக கருத்து தெரி வித்தனர். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரவீனா குமாரி உட்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×