search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிடகோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
    X

    மனு அளிக்க வந்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

    மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிடகோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

    • அரசு மதுபானக்கடை அமைக்கப்பட்டால், மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள்.
    • பள்ளி மாணவிகள் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்ப டுவார்கள்.

    தருமபுரி,

    அரசு மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காரியப்பன அள்ளி கிராம மக்கள் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி யிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் காரியப்பன அள்ளி கிராமத்தில் அரசு மதுபானக்கடை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதியதாக மதுபானக்கடை திறக்க உள்ள இடம் அரசு உயர் நிலைப்பள்ளிக்கும், அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கும், இடை யில் உள்ளது.

    இங்கு அரசு மதுபானக்கடை அமைக்கப்பட் டால், மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள். மேலும் பள்ளி மாணவிகள் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்ப டுவார்கள். பெண்களுக்கும், பொது மக்களுக்கும் மது பான கடையால் பாதிப்பு ஏற்படும்.

    எனவே டாஸ்மாக் நிர்வாகம் எங்கள் பகுதியில் மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.

    Next Story
    ×