search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் வனத்துறை அதிகாரியை கண்டித்து  கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்- பொய் வழக்கு போடுவதாக புகார்
    X

    கீழ வடகரை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.

    களக்காட்டில் வனத்துறை அதிகாரியை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்- பொய் வழக்கு போடுவதாக புகார்

    • கீழவடகரையில் கரடி வேட்டை நடந்ததாக வனத்துறையினர் தோட்டக் காவலாளியை கைது செய்தனர்.
    • கிராம மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் கரடி வேட்டை நடந்ததாக வனத்துறையினர் தோட்டக் காவலாளியை கைது செய்தனர்.

    மேலும் 20 பேரை தேடி வருவதாகவும் அறிவித்தனர். ஆனால் வனத்துறையில் நிலவும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும், வனவிலங்குகள் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டும் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வந்ததன் காழ்புணர்ச்சி காரணமாக வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரன் கரடி வேட்டை நடந்ததாக பொய் வழக்கு பதிவு செய்து, துன்புறுத்தி வருவதாக கீழவடகரை கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதுபற்றி மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கீழவடகரை கிராம மக்கள் சார்பில் வனத்துறை துணை இயக்குனரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் லெட்சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் முத்துவேல், ஒன்றிய துணை செயலாளர் லெனின் முருகானந்தம், பொருளாளர் அயூப்கான், மாநில குழு உறுப்பினர் வேலாயுதம், சுப்பையா, ஐயாகுட்டி, ஜவஹர், கோசிமின், ராமசுப்பு, சுரேஷ், ஸ்ரீதர், வேல்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சுந்தர் மற்றும் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கை குழந்தையுடன் வந்த பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் பொய் வழக்கு பதிவு செய்யும் வனத்துறை இயக்குனர் ரமேஷ்வரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், துணை இயக்குனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    அத்துடன் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு களக்காடு போலீசார் கடும் கெடுபிடி செய்ததாகவும் புகார் தெரிவித்தனர். கீழவடகரையில் வனத்துறையின் கிராம வனக்குழு செயல்பட்டு வருகிறது.

    இந்த வனக்குழு தலைவர் பாலன் மற்றும் கிராம மக்கள் வனப்பகுதியில் காட்டு தீ விபத்துகள் ஏற்பட்ட போது, அதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனக்குற்றங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதனால் கடந்த 2019-2020 ஆண்டில் சிறந்த வனக்குழுவாக கீழவடகரை கிராம வனக்குழு தேர்வு செய்யப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் விருது வழங்கியுள்ளனர்.

    தற்போது அந்த குழுவின் தலைவர் பாலன் மற்றும் கீழவடகரை கிராம மக்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் அந்த விருதுடன் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×