search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை வழங்க கோரி ஆத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
    X

    ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    100 நாள் வேலை வழங்க கோரி ஆத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர்
    • ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக சில பகுதி மக்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் வேலை வழங்கப்படாத 1, 2, 3 வார்டு பகுதிகளைச் சேர்ந்த ஆத்தூர் மேற்கு தெரு, வடக்குத்தெரு, வெள்ளாளர் தெரு, நாயுடு தெரு, கள்ளர் தெரு, ஆலம்பட்டி, அக்ரஹாரம் தெரு, மாலம்பட்டி, பத்திர ஆபிஸ் தெரு, மாதா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோசமிட்டனர். தகவல் அறிந்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, லாரன்ஸ் மற்றும் ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்தூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலையில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக உள்ளது.

    இதனால் 100 நாள் வேலையில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. பணிக்கு வராதவர்களுக்கு வேலைக்கு வந்ததாக வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை பணிகளில் வார்டு உறுப்பினர்கள் தலையீடு இருக்கக் கூடாது என அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×