கால்நடை மருத்துவ முகாம்

350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
Published on

நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் அறிவு றுத்தலின் பெயரிலும் நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.

முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்து வர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன், ஊராட்சி செயலர் பிரகாஷ்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com