search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
    X

    ஆழ்வார்திருநகரி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    • திருக்கோளூர் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுரேஷ், நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் சரண்யா ஆகியோர் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் திருக்கோளூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் கால் நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ் ஆலோசனையின்படி கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி இயக்குனர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை வளர்ப்பிற்கான கண்காட்சி மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்போர்களுக்கு விருது மற்றும் சிறந்த கன்று வளர்ப்புக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஆழ்வார்திரு நகரி கால்நடை மருத்துவ மனை மருத்துவர் சுரேஷ், நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் சரண்யா ஆகியோர் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர். முகாமில் சிறப்பு விருந்தினராக திருக்கோளூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஈனமுத்து கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் முகாமில் வாழ்ந்து காட்டுவோம் பணியாளர்கள் கால்நடை பராமரிப்புத்துறை ராஜேஷ், செல்வம் மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை அருள் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×