search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்ப்பு பணிகள் நிறைவு
    X

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்ப்பு பணிகள் நிறைவு

    • 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    • பழுதடைந்த எந்திரங்கள், பெங்களூருக்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக அறை வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரி பார்க்கும் பணிகள், மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் எந்திரங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த எந்திரங்களை சரிபார்க்கும் முதற்கட்ட பணி கடந்த மாதம் ஜூலை 4-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சரிபார்க்கப்பட்ட எந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பரிசோதிப்பதற்கான முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு 2 நாட்கள் நடந்தது. இதற்காக 5 சதவீத எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    இதில் ஒரு சதவீத எந்திரங்களில் 1200 வாக்குகளும், 2 சதவீத எந்திரங்களில் 1000 வாக்குகளும், 2 சதவீத எந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதற்காக 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் முதல் நிலை சரிபார்ப்பு பணியில் சரிவர செயல்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், முதல் நிலை சரிபார்ப்பில், பழுதடைந்த எந்திரங்கள், பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது, இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது தேர்தல் தனி தாசில்தார் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×