search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்ட கலெக்டரிடம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு
    X

    கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி மனு போது எடுத்த படம். அருகில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உள்ளார்.

    தென்காசி மாவட்ட கலெக்டரிடம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு

    • வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி , தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார்.
    • மயிலப்பபுரம் காமராஜர் நகருக்கு செல்லும் பாதை நீர்நிலை புறம்போக்காக இருக்கும் இடத்தை பொது பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி மாவட்ட செயலாளர் சிவபத்த நாபன் தலைமையில், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் , முத்தம்மாள்புரத்தில் மறுகால் செல்லும் ஒடையில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்தலிங்கபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மயிலப்பபுரம் காமராஜர் நகருக்கு செல்லும் பாதை நீர்நிலை புறம்போக்காக இருக்கும் இடத்தை பொது பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போது தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உடன் இருந்தார்.

    Next Story
    ×