என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வண்ணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா கணவனை இழந்த இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவது மகன் சாலமோன் (வயது 39), திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், சாலமோன் நேற்று தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க அவருடைய உறவினர் டேனியல் என்பவரின் மாந்தோப்பிற்கு சென்றார்.
அப்போது அங்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால் சுமார் 10 அடி தூரமுள்ள வயலில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
அவரது தாயார் சுசீலா அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சென்று தேடி பார்த்துள்ளார்.
சந்தேகப்பட்டு ஆடு மேய்க்க சென்ற இடத்திற்கு சென்றார். அருகே உள்ள வயலில் தனது மகன் அசைவற்று கிடந்ததை பார்த்து அவர் கதறி அழுதார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாலமோனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் சுசீலா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்