13 வயது மகளுடன் பெண் மாயம்

ரூ.40 ஆயிரத்துடன் வெளியேறினார் போலீசார் தேடி வருகின்றனர்
13 வயது மகளுடன் பெண் மாயம்
Published on

வேலூர்:

காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் சேர்ந்தவர் கவிதா (வயது 40). இவருக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ளார். இவர் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை கவிதாவின் கணவர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு கவிதா ஆளானார் .

பின்னர் வீட்டில் இருந்த ரூ. 40 ஆயிரம், 13 வயதுடைய மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் மற்றும் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தில், உறவினர் வீடுகளிலும் தேடி உள்ளார். அவர்கள் கிடைக்காததால் இதுகுறித்து அவர் காட்பாடி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கவிதாவையும், 13 வயதுடைய மகளையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com