வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்

குறை தீர்வு கூட்டம் நடந்தது 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மயங்கி விழுந்த பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்த போலீசார்.
மயங்கி விழுந்த பெண்ணிற்கு தண்ணீர் கொடுத்த போலீசார்.
Published on

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

இதில் காட்பாடி செங்குட்டையை சேர்ந்த பாரதி (வயது 43). என்பவர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்று சென்ற பாரதி, மனு அளிக்க கலெக்டர் அருகே சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து, எழுப்பினர். காலை முதல் பாரதி சாப்பிடாமல் இருந்ததால் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை ஏற்று, அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதனையடுத்து பாரதி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com