search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசியக்கொடி மின் அலங்காரத்தால் வேலூர் கோட்டை ஜொலிக்கிறது
    X

    மின்னொளியில் ஜொலிக்கும் வேலூர் கோட்டை.

    தேசியக்கொடி மின் அலங்காரத்தால் வேலூர் கோட்டை ஜொலிக்கிறது

    • சுதந்திர தின அமிர்த பெருவிழா
    • 15 -ந்தேதி வரை மிளிரும் என அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    நாடு முழுவதும் நாட்டின் 75 வது சுதந்திர தினவிழாவை அமிர்தபெருவிழாவாக, பல வகைகளில் தொடர்ந்து கொண்டாடப் பட்டு வருகிறது.

    விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து சிப்பாய் புரட்சி நடந்த வேலுார் கோட்டை வர லாற்று சிறப்புமிக்கது.

    தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கோட்டை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நி லையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, அகழியின் எதிரே உள்ள மதிற்சுவரில், மூவர்ணக்கொடியின் வண் ணத்தை போல் மின்விளக் குகள் அலங்கரிக்கப்பட் டுள்ளது.

    இரவு நேரங்களில் கோட்டையில் ஒளிரும் தேசியக்கொடியின் வண் ணம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கவர்ந்து வருகிறது. வரும் 15 -ந்தேதி வரை இந்த மின்விளக்கு மூவர் ணக்கொடியின் வண்ணத் தில் கோட்டை மிளிரும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×