search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் சீருடை பணியாளர் உடற்தகுதி தேர்வு
    X

    வேலூரில் சீருடை பணியாளர் உடற்தகுதி தேர்வு

    • நாளை முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது
    • டி- சர்ட் அணிந்து வர அனுமதி மறுப்பு

    வேலுார்:

    தமிழ்நாடு சீருடைப்ப ணியாளர் தேர்வாணையம் சார்பில், 2ம் நிலை போலீ சார், சிறை போலீசார் மற் றும் தீயணைப்பாளர் ஆகி யவற்றில் 3 ஆயிரத்து 552 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி எழுத்துத்தேர்வு நடந்தது.

    இதில், தமிழகம் முழு வதும் 2 லட்சத்து 99 ஆயி ரத்து 820 பேர் பங்கேற்ற னர். வேலுார்மா வட்டத்தில் 12 ஆயிரத்து 577 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து, இந்த தேர்வின் முடிவுகள், கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி வெளியானது.

    இதை யடுத்து, எழுத் துத்தேர்வில் தகுதி பெற்ற வர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, நாளை முதல் வரும் 11ம் தேதி வரை நடக்கி றது. இதற்காக, ஒரு காலிப் பணியிடத்துக்கு 5 பேர் வீதம் என்ற அடிப்படை யில், தகுதி பெற்றவர்க ளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

    அதன்படி, வேலுார் நேதாஜி மைதானத்தில் நடக்கும் உடற்தகுதித் தேர் வில், மொத்தம் ஆயிரத்து 300-க்கும் அதிகமான ஆண் கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிக்கு வரும்போது, அழைப்புக் கடிதம், ஏதே னும் ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட் டையையும் கொண்டு வர வேண்டும். மேலும் அழைப்பு கடிதத்தில் குறிப் பிட்டுள்ள அசல் சான்றி தழ்கள் மற்றும் அவற்றின் நகல் ஒன்றையும் கொண்டு வர வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுகளில் ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு கலந்துகொள்ள

    விரும்பினால் ஒரே வண் ணம் கொண்ட ஷார்ட்ஸ் மற்றும் எவ்வித எழுத்துக் களும் படங்களும் இல் லாத டி-சர்ட் அணிந்து வர வேண்டும். எவ்வித பயிற்சி மையத்தின் அடை யாளமோ அல்லது விண் ணப்பதாரர்கள் எவ்வித சின்னமோ கொண்ட டி- சர்ட் அணிந்து கொண்டு வரும் பட்சத்தில் உடற் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

    அனுமதி இந்த தேர்வுக்கு வரும் ஆண் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாமல் தங்களது தலைமுடியை சீராக திருத்தம் செய்து வர வேண்டும். விண்ணப்ப தாரர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் மற்றும் ெகாரோனா விதி முறைகளை பின்பற்ற வேண்டும். விண்ணப்ப தாரர்கள் அனைவரும் மேற் கண்ட அறிவுரைகளை பின்பற்றி தேர்வு மையத் துக்கு வரும்படி தெரிவிக் கப்பட்டுள்ளது.

    Next Story
    ×