`செல்லாது' வதந்தியால் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்த முடியாமல் திண்டாட்டம்

கிழிந்த ரூபாய் நோட்டுகளால் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
`செல்லாது' வதந்தியால் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்த முடியாமல் திண்டாட்டம்
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வலு பெற்று ள்ள கார ணத்தால் 10 ரூபாய் நாணய த்தை வைத்து ள்ள வணி கர்களும், பொ தும க்களும் வெகு வாக பா திக்க ப்பட்டு வருகிறார்கள்.

10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே என்று ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்துவிட்டது. ஆனால் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்னமும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் திருப்பதிக்கு வேலூர் வழியாகத்தான் சென்று வருகிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்கள் தன்னிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

ஆயிரம், 2 ஆயிரம் என ஆயிரக்கண க்கில் 10 ரூபாய் நாண யங்க ளை வை த்திரு ப்பவர்கள் என்ன செய்வ து என்ற குழப்ப த்தில் இரு க்கிறார்கள். சிறுவி யாபாரிகள் 10 ரூபாய் நாணையங்களை வாடிக்கையாளர்களிடம் வாங்க மறுப்பதோடு, வங்கிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்ற விழிப்புணர்வு இல்லை.

10 ரூபாய் நாணயங்கள் செல்லும். அதனை வர்த்தர்கர்கள், பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று மீண்டும் தெரிவித்துள்ளனர்.

மேலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் 10 ரூபாய் நோட்டுகள் தற்போது தட்டுப்பாடாக உள்ளது.

பழைய 10 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும் அதிக சேதமடைந்த நிலையில் தான் உள்ளன.

இதனால் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவி வருவதால் அதனை வாங்க மறுக்கின்றனர்.

அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு இழப்பு ஏற்படுத்தும்.

10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் மத்தியில் அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com