என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளில் மோதியது
- போக்குவரத்து பாதிப்பு
வேலூர்:
பெங்களூரில் இருந்து இன்று காலை இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
வேலூர் அருகே உள்ள பொய்கை மேம்பாலம் அருகே வந்த போது திடீரென லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சாலை தடுப்புகளை உடைத்து எதிர் திசையில் பாய்ந்து சென்னை பெங்களூர் சாலையில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் சாலை முழுவதும் சிதறின.
இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் சென்னை பெங்களூர் மார்க்கத்தில் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உடனடியாக பெங்களூர் நோக்கி வந்த வாகனங்களை சர்வீஸ் சாலையில் திருப்பி விட்டனர்.
இதனையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு சாலையில் லாரி மற்றும் இரும்பு கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து சீரானது.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்