ஆடி மாத சீர்வரிசை தட்டில் தக்காளி

பெண் வீட்டார் வழங்கினர் பழங்களின் விலை போன்று தக்காளி விலையேற்றதால் மாப்பிள்ளை வீட்டாருக்கு ெகாடுத்தனர்
ஆடி மாத சீர்வரிசை தட்டில் தக்காளி
Published on

கே.வி.குப்பம்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், காமாட்சி அம்மன் பேட்டை, பினாங்கு காரர் என்பவர் வீட்டில் சமீபத்தில் திருமணம் நடை பெற்றது.

புதிதாக திருமண மான, ஓராண்டுக்கு உள்ளான, மணப்பெண்ணை தாய் வீட்டார் சீர்வரிசை வைத்து மணமகன் இல்லத்திலி ருந்து தங்கள் வீட்டிற்கு அழைத் துச் செல்வது வழக்கம்.

ஆடி மாதம் முடியும் வரை தாய் வீட் டில் வைத்திருந்து, பிறகு ஒரு நல்லநாள் பார்த்து புகுந்த வீட் டிற்கு அனுப்பி வைப்பார்கள். அதன்படி, பள்ளிகொண்டாவை சேர்ந்த பெண் வீட் டார் வருகிற 17-ந் தேதி ஆடி மாதம்பிறப்பதை முன்னிட்டு, பிறந்த வீட்டு சீர் வரிசையாக ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றின் வரிசையில் தக்காளி பழத்தையும் மதிப்பிற் குரியதாக வைத்து பெண்ணை அழைத்துச் சென்றனர்.

உயர் ரகபழங்களுடன் சீர்வரிசை தட்டில் வைக்கப்படும் அளவிற்கு தக்காளிப்பழம் சீர்வரிசை தட்டில் இடம் பெற்றிருந்தது வியப்பாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com