காய்கறி வியாபாரி வீட்டில் 2 கியாஸ் சிலிண்டர் திருட்டு

தொழிலாளர்கள் 2 பேர் கைது போலீசார் விசாரணை
காய்கறி வியாபாரி வீட்டில் 2 கியாஸ் சிலிண்டர் திருட்டு
Published on

வேலூர்:

வேலூர் அடுத்த தொரப்பாடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் ஊர் ஊராக வாகனங்களில் வைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரிடம் அதே தெருவை சேர்ந்த அஸ்வின் (36), பாபு (41) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சத்தியமூர்த்தி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை தொழிலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்று இருந்தார்.

நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் ஒரு யு.பி.எஸ் பேட்டரி திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து சத்தியமூர்த்தி பாகாயம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரனையில் அஸ்வின், பிரபு ஆகியோர் பூட்டி இருந்த வீட்டை திறந்து கியாஸ் சிலிண்டர், பேட்டரி திருடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com