search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரங்கு கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்
    X

    குரங்கு கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்

    • 2 வயது குழந்தையை கடித்து குதறியது
    • பல்வேறு இடங்களில் பிடிக்கும் குரங்குகளை இங்கு விட்டு செல்வதாக குற்றச்சாட்டு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் தமிழக ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் 400-க்கும் அதிகமான வீடுகள் உள்ளது ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமம் வனப் பகுதியை ஒட்டியபடி உள்ளதால் அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்தில் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தும் அதேபோல் நூற்றுக்கணக்கான குரங்குகள் கூட்டமாக வந்து இந்த கிராமங்களில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும் தின்பண்டங்களை எடுத்துச் சென்று தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகின்றன.

    இதனால் கிராமத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்வதற்கு வைத்திருந்த பொருட்களையும் குரங்கு கூட்டம் எடுத்துச் செல்வதால் கடை சுற்றியும் வலையடித்து வியாபாரம் செய்கின்றனர் .

    ேமலும் வீடுகளில் குரங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இரும்பு கதவுகள் பொருத்தியுள்ளனர் இருப்பினும் கடந்த சில நாட்களாக குரங்குகள் உணவு தேடி கிராமத்திற்குள் படையெடுத்து கிராம மக்களை கடித்து வந்துள்ளது.

    நேற்று முன்தினம் சைனகுண்டா கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்தி என்பவரது 2 வயது பெண் குழந்தையை வீட்டிற்கு வெளியே இருந்தபோது பாய்ந்து வந்த குரங்கு கூட்டம் திடீரென அந்த சிறுமி மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது இதில் தலை முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது உடனடியாக அந்த சிறுமியை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    குரங்கு கூட்டம் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை கடிக்கும் சம்பவத்தையடுத்து அந்த குரங்குகளை அப்புறப்படுத்த வேண்டும் என நேற்று மாலையில் திடீரென கார்த்தி தனது உறவினர்கள் கிராம மக்களுடன் சைனகுண்டா வனத்துறை செக் போஸ்ட் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறை சோதனை சாவடியில் இருந்த காவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று குரங்குகள் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    சாலை மறியல் நடந்து கொண்டிருந்தபோதே வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன அப்போது குரங்கு கூட்டம் அந்த வாகனங்கள் மீது ஏறி குதித்தது.

    வெளியூரில் பிடிக்கப்படும் குரங்குகள் இக்கிராமத்தில் விடப்படும் அவலம்

    குரங்குகள் கூட்டமாக வருவது குறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் குரங்குகள் இரவு வேலைகளில் இந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் விட்டுவிட்டு சென்று இருக்கின்றனர். இதனால் அந்த குரங்குகள் கிராம மக்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்குகிறது மேலும் குரங்குகளுக்கு உணவு அளிக்கிறோம் என்ற ரீதியில் நிறைய பேர் வாகனங்களில் பழம் பிஸ்கட் போன்றவை கொண்டு வந்து சைனகுண்டா கிராமம் முதல் ஆந்திர மாநில எல்லை வரை சாலையில் குரங்குகளுக்கு தின்பண்டங்களை தருகின்றனர்.

    இதனால் இந்த குரங்குகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. தின்பண்டங்கள் கிடைக்காத போது கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளில் புகுந்து சேதத்தை விளைவிக்கிறது இந்த குரங்குகளால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    Next Story
    ×