search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாடகை செலுத்தாத கடைகளுக்கு நள்ளிரவில் சீல்
    X

    வாடகை செலுத்தாத கடைகளுக்கு நள்ளிரவில் சீல்

    • நள்ளிரவு கடைகளுக்கு சீல் வைத்த செயல் மிகவும் வேதனை அளித்தது
    • வியாபாரிகள் அதிர்ச்சி

    வேலூர்:

    வேலூர், மாநகராட் சிக்கு உட்பட்ட கடைகள் மற்றும் குத்தகை இனங்க ளில் வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூல் செய்யும் பணியில் மாநக ராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் கோட்டை எதிரே உள்ள லாரி ஸ்டாண்டில் மாநகராட்சிக்கு சொந்த மான கடைகள் உள்ளது. இதில் சிலர் வாடகைக்கு இருப்பதாக தெரிகிறது.

    இந்த பகுதியில் உள்ள 3 கடைகள் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதால், வாடகையை செலுத்துமாறு மாநகராட்சி சார்பில் நோட் டீஸ் வழங்கப்பட்டது.

    மாநகராட்சி அதிகாரிகள் கடைகளின் அலுவலக வேலை நேரத் தில் தான் சீல் வைக்கும் பணியை மேற்கொள்வார்கள். ஆனால் நேற்று நள் ளிரவு லாரி ஸ்டாண்டுக்கு வந்த அதிகாரிகள் பூட்டி யிருந்த 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

    மேலும் வாடகை பாக்கி உள்ளதால் கடைக ளுக்கு சீல் வைத்து உள்ள தாக நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கடைகளின் உரிமை யாளர்கள் நள்ளிரவில் கடைகள் பூட்டி சீல் வைத்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது மாநகராட்சி யின் இந்த செயல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. எங்க ளின் அன்றாட தேவைக் கான பொருட்களை கடை யின் உள்ளே வைத்து உள்ளோம்.

    இதனால் எங்களின் தொழிலும் பாதிக் கப்படுகிறது. நள்ளிரவு கடைகளுக்கு சீல் வைத்த செயல் மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×