search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
    X

    பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

    • 40 பேர் பணியில் ஈடுபட்டனர்
    • பிளாஸ்டிக் பைகள், உள்ளிட்டவை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாசுக்கட்டு ப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து கோட்டை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சி 4-வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநகராட்சி ஊழியர்கள் 40 பேர், மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் 15 பேர், என 55 பேர் கோட்டை நுழைவாயில், கோட்டை வளாகம் முழுவதும் ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.

    மேலும் கோட்டையினுள் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள், உள்ளிட்டவை பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க ப்படும் பகுதி என எச்சரிக்கை பலகை வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் உதவி என்ஜினீயர்கள் சுஷ்மிதா, சவுந்தர்யா, உதவி மேலாளர் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×