என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி மூதாட்டி பலி
- சாலையை கடந்தபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 75). இவர் பி.கே. புரம் அருகில் குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ் சாலையில் நள்ளிரவில் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அதே இடத்தில் சகுந்தலா பலியானார்.
இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story