search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
    X

    பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

    • வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நடந்தது
    • பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வைகுண்ட ஏகாதசியை சொர்க்கவாசல் சேவை நடைபெறுவது வழக்கம். இது தொடர்பாக நேற்று ஆர்டிஓ தலைமையில் பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதிகள் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான உத்திர ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஜனவரி 2-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் சேவை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வேலூர் ஆர்டிஓ பூங்கொடி தலைமையில் தாசில்தார் ரமேஷ் திருக்கோயில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வருவாய் துறை, பேரூராட்சி துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்று இருந்தனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 30 முதல் 50 ஆயிரம் வரை பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் கூட்டத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்கள் மூலம் பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் போது அதிக அளவில் பஜனை குழுக்கள் திருக்கோவிலுக்கு வருகை செய்வதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சாலையை உபயோகப்படுத்துவதாலும் அன்று ஒரு நாள் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மாற்றுப்பாதையில் கனரக வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மேலும் இக்கூட்டத்திற்கு போக்குவரத்து துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு வருகை புரியாமல் புறக்கணித்ததால் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பொதுமக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    இக்கூட்டத்தில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஆர் ஐ ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் சந்திரன் சுகாதார், மேற்பார்வையாளர் ரமேஷ், திருக்கோயில் கணக்காளர் பாபு மற்றும் மணியம் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

    Next Story
    ×