தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒத்திகை

கட்டிட இடுபாடில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செய்து காட்டினர் நிலநடுக்கத்தின் போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நடத்திய காட்சி.
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நடத்திய காட்சி.
Published on

வேலூர்:

தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வி.ஐ.டி பல்கலைக பேரிடர் மீட்பு குழு ஆகியவை இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பது என்ற போலி ஒத்திகை பயிற்சி இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மீட்புக் குழு துணை கமாண்டர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிலநடுக்கத்தில் கட்டிட இடுபாடில் மாணவர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று பேரிடர் மீட்பு குழுவினர் போலி ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மாணவர்களை காப்பாற்றினர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் போது பேரிடர் மீட்பு குழு, மருத்துவ குழு, தீயணைப்பு குழு, பொதுப்பணித்துறை, ஆம்புலன்ஸ் ஆகிய துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.

அவ்வாறு இணைந்து செயல்பட்டால் தான் பேரிடரில் இருந்து மக்களை உயிருடன் காப்பாற்றலாம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com