என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நீரோடையில் பதுக்கிய சாராய ஊறல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சமந்தை, குண்ராணி மலைப்பகுதியில் நீர் ஓடையில் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் நீரோடையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தேடிபார்த்தனர்.
பின்னர் நீரோடையின் அருகில் நீர் தேக்க பேரல்கள் இருப்பதை பார்த்தனர்.
அதனை நோக்கி செல்லும் போது அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் திடீரென தப்பி ஓடினர்.
இதனையடுத்து தீவிரமாக தேடி ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெள்ளம், பட்டைகள் கலந்து 9 பேரல்களில் ஊற வைக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராய ஊறலை கீழே தள்ளி அழித்தனர். இதன்பின் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்டு இருந்த அனைத்து பொருட் களையும் தீயிட்டு கொளுத்தினர்.
தப்பி ஓடிய சாராய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X