search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் மனிதசங்கிலி போராட்டம்
    X

    வேலூரில் மனிதசங்கிலி போராட்டம்

    • வருகிற 24-ந் தேதி நடக்கிறது
    • ஜாக்டோ ஜியோ காட்பாடி வட்ட உயர்மட்ட குழு தீர்மானம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் காட்பாடியில் நடைபெற்றது.

    மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தன்ன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஜாக்டோ ஜியோ பேரமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட பொருளாளர் ஆர்.கற்பகமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெ.வில்வநாதன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் பெ.இளங்கோ, தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்-24-ந் தேதி வேலூர் காந்திசிலை, அணைகட்டு, பேர்ணாம்பட்டு மற்றும் கே.வி.குப்பம், வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்பாடி, குடியாத்தம், தாசில்தார் அலுவலகம் அருகில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

    Next Story
    ×