search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து பெண் பலாத்காரம்
    X

    வீடு புகுந்து பெண் பலாத்காரம்

    • முதியவர் ஜெயிலில் அடைப்பு
    • அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்

    வேலூர்:

    காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது மனநலம் குன்றிய பெண்.

    கடந்த 5 ஆண்டுகளாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் தனியாக இருந்தார். அவரது எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52).

    மனம் நலம் குன்றிய பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து, கோவிந்தசாமி அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து உள்ளார்.

    இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து கோவிந்தசாமி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×