search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதி
    • பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நடவடிக்கை

    வேலூர்:

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்த பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் இன்றுகாலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில், விரிஞ்சிபுரம் மார்கப்பந்தீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் மற்றும் பொருட்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    மேலும் இந்த கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் கோட்டையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டைக்கு வந்த பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினர்.

    கார், மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களையும் சோதனை செய்து உள்ளே அனுப்பினர். கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகள் பலர் போலீசாரை கண்டதும் உள்ளே செல்லாமல் தானாக திரும்பி சென்றனர்.

    இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    மேலும் வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தலப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் சோதனை செய்யபடுகிறது.

    மாவட்டம் முழுவதும் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிகள் புதன்கிழமை காலை வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×