search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்மோட்டார் திருட்டு
    X

    மின்மோட்டார் திருட்டு

    • வாலிபர் கைது
    • ரோந்து பணியில் சிக்கினார்

    வேலூர்:

    காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது வீட் டில் இருந்த மின்மோட்டர் மற்றும் பாய்லரை கடந்த மாதம் 24-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்து கண்கா ணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை சில்க்மில்க் பகுதியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காந்திநகர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பதும், மின் மோட்டரை திருடியதும் தெரியவந்தது. இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×