பலத்த மழையால் சேதமடைந்த வாழை, பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து இனிப்பு வழங்கினார்கள்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து இனிப்பு வழங்கினார்கள்
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, துணை தலைவர் அருண்முரளி, ஒன்றிய பொறியாளர்கள் புவியரசன், குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலகம் மேலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பேசிய உறுப்பினர் ராஜேஸ்வரிபிரதீஷ்- குடும்பத் தலைவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க பட்ஜெட்டில் அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உறுப்பினர் ராஜேஸ்வரிபிரதீஷ், ஆனால் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலக அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

தலைவர் சத்யானந்தம் பேசுகையில்:-

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவு நெசவாளர்கள் உள்ளனர் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட் ஆகவும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 700 யூனிட்டிலிருந்து ஆயிரம் யூனிட்டாக இலவச மின்சாரத்தை உயர்த்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து உறுப்பினர் சுரேஷ்குமார்-பேசுகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் பலத்த சூறாவளி உடன் கனமழை பெய்தது இதில் ஏராளமான மரங்களும், வாழை, தென்னை, நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் பெருத்த சேதம் அடைந்தது வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து உரிய நிவாரணத் தொடங்கி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேளாண்மை துறையினர் சரிவர வரவில்லை, வருவாய்த்து றையினர் வரவில்லை என குற்றச்சாட்டு உள்ளது விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

உறுப்பினர் குட்டி வெங்கடேசன் ராமாலைப் பகுதியில் சுடுகாட்டு வசதி செய்து தர வேண்டும், பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெருமளவு கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

பள்ளியில் மேலாண்மை குழு உள்ளது என்ன செய்கிறார்கள் காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதும் போது எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என கண்காணித்திருக்க வேண்டும், ராமாலைப் பகுதிக்கு காலை, மதியம், மாலை டவுன் பஸ் வந்தது தற்போது சரிவர பஸ் வருவதில்லை இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

உறுப்பினர் மனோகரன் பேசுகையில்:-

60 வயது மேற்பட்ட வர்களுக்கு முதியோர் உதவித்தொகை சரியா னபடி கிடைக்கவில்லை வயது குறைவான வர்கள் முதியோர் உதவித்தொகை பெறுகின்றனர், அக்ரஹாரம் பகுதியில் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி அரங்கம் அமைத்து தர வேண்டும்.

உறுப்பினர் ரஞ்சித்குமார் பேசுகையில்:-

அணக்காநல்லூர் பகுதியில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. பிடித்து காட்டில் விட வேண்டும் மேலும் செம்பேடு கூட்ரோடு முதல் உள்ளி பாலம் வரை உள்ள பாதை மிகவும் பழுதடைந்துள்ளது, உள்ளி தார்சாலையும் மிகவும் பழுதடைந்துள்ளது, கூடநகரம் ஏரி கரைப்பகுதியில் விடுபட்ட சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். இதே போல் கவுன்சிலர்கள் கவுரப்பன், தீபிகாபரத், இமகிரிபாபு, இந்திராகாந்தி உள்பட பலர் பேசினார்.

தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளுக்கு கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களை வழங்கி கொசுக்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com