

குடியாத்தம்:
குடியாத்தம் கிராமிய தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் பேரில் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிெரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், குணசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் ஊராட்சி பூங்குளம் மலைப்பகுதி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சோதனை நடத்தினர்.
அப்போது சிலர் அடுப்புகள் வைத்து சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் சாராயம் காய்ச்சிய அடுப்புகளை உடைத்து அகற்றினர் மேலும் அங்கு 4 பேரல்களில் இருந்த 500 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சாராயம் காய்ச்சியவர்களை தேடி வருகின்றனர்.