search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு புகுந்து கியாஸ் சிலிண்டர் திருட்டு
    X

    வீடு புகுந்து கியாஸ் சிலிண்டர் திருட்டு

    • 2 பேருக்கு அடி- உதை
    • போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    சத்துவாச்சாரி பொன்னியம்மன் நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ மனோஜ் (வயது 21).இவரது வீட்டில் உள்ள போர்டிகோவில் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றை வைத்திருந்தனர். நேற்று மதியம் 1 மணிக்கு 2 பேர் பைக்கில் அவருடைய வீட்டின் அருகே வந்தனர். போர்டிகோவில் சிலிண்டர் இருந்ததை பார்த்த அவர்கள் அதனை திருட முடிவு செய்தனர்.

    ஒருவர் சென்று போர்டிகோவில் இருந்த சிலிண்டரை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.அதனை பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றனர். அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த ஸ்ரீமனோஜ் குடும்பத்தினர் சிலிண்டர் திருடி செல்வதை கண்டு கூச்சலிட்டனர். அந்த தெருவில் இருந்த பொதுமக்கள் சிலிண்டர் திருடியவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலிண்டர் திருடிய இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 46) கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்துவாச்சாரியில் நேற்று கெங்கையம்மன் கோவிலில் அம்மன் நகைகள் கொள்ளை போனது. பட்டப்பகலில் வீடுபகுந்து கியாஸ் சிலிண்டர் திருடியுள்ளனர். இதனால் பொது மக்களிடையே திருட்டு பயம் ஏற்பட்டுள்ளது.

    பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×